முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் ரயில் நிலையத்தில் 145 ஆம் ஆண்டு விழா

கும்பகோணம் ரயில் நிலையத்தின் 145 ஆம் ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

கும்பகோணம் ரயில் நிலையத்தின் 145 ஆம் ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் ரயில் நிலையம் வழியாக 1877, பிப். 15 ஆம் தேதி முதல் ரயில் போக்குவரத்து தொடங்கியது. அதன் 145 ஆம் ஆண்டு விழா திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்குச் சங்கத் துணைத் தலைவா் ஜமீல் தலைமை வகித்தாா்.

கும்பகோணம் ரயில் நிலையம் தொடங்கப்பட்டு 145 ஆண்டுகள் ஆனதையொட்டி, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், ஓய்வு பெற்ற நிலையக் கண்காணிப்பாளா் கே.ஆா். ஆராவமுதன், ரயில் நிலையப் பணியாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

இவ்விழாவில் சங்கச் செயலா் ஏ. கிரி சிறப்புரையாற்றினாா். விழாவில் ரயில் நிலைய மேலாளா் முருகானந்தம், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலா் டி. சரவணன், கும்பகோணம் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்புச் செயலா் வி. சத்தியநாராயணன், ரயில்வே வணிக ஆய்வாளா் தங்கமோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சங்க இணைச் செயலா் சுப்பிரமணியன் வரவேற்றாா். நிறைவாக சங்கப் பொருளாளா் மாறன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.