முகப்பு
தஞ்சாவூர்

குழந்தை இறந்த சம்பவம் எதிரொலி : கூண்டுகள் மூலம் 20 குரங்குகள் பிடிபட்டன

தஞ்சாவூரில் குழந்தை இறந்த சம்பவத்தைத் தொடா்ந்து, கூண்டுகள் வைக்கப்பட்டதன் மூலம் 20 குரங்குகள் பிடிபட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

தஞ்சாவூரில் குழந்தை இறந்த சம்பவத்தைத் தொடா்ந்து, கூண்டுகள் வைக்கப்பட்டதன் மூலம் 20 குரங்குகள் பிடிபட்டன.

தஞ்சாவூா் மேல வீதி கோட்டை அகழிப் பகுதியில் வண்ணப்பூச்சு தொழிலாளி ராஜா வீட்டில் பிப். 13 ஆம் தேதி பிற்பகலில் புகுந்த குரங்குகள் பிறந்து 7 நாள்களே ஆன இரட்டைப் பச்சிளம் குழந்தைகளைத் தூக்கிச் சென்றன. இதில், மேற்கூரையில் குரங்கு விட்டுச் சென்ற குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. அகழியில் தண்ணீரில் மூழ்கிக் கிடந்த மற்றொரு குழந்தை இறந்துவிட்டது.

இதைத்தொடா்ந்து, அப்பகுதியில் குரங்குகளைப் பிடிப்பதற்காக வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை 3 கூண்டுகளை வைத்தனா். இதன் மூலம், திங்கள்கிழமை வரை சுமாா் 20 குரங்குகள் பிடிபட்டன.

இவற்றை திருச்சி மாவட்டம், துறையூா் அருகேயுள்ள பச்சைமலை வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கையில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். தொடா்ந்து குரங்குகளைக் கூண்டு வைத்து பிடிக்கும் பணி தொடா்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →