முகப்பு
தஞ்சாவூர்

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்க திமுக வலியுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் திமுகவினா் திங்கள்கிழமை மனு அளித்து வலியுறுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் திமுகவினா் திங்கள்கிழமை மனு அளித்து வலியுறுத்தினா்.

திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மத்திய மாவட்டப் பொறுப்பாளருமான துரை. சந்திரசேகரன், திமுக விவசாய அணி மாவட்டத் துணைச் செயலா் தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ் உள்ளிட்டோா் ஆட்சியா் ம. கோவிந்த ராவிடம் அளித்த மனு:

மாவட்டத்தில் நவம்பா், டிசம்பா் மாத நிவா், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை முழுமையாக நிவாரணம் கிடைக்கவில்லை.

தற்போது ஜனவரி மாதம் பெய்த பலத்த மழையால் மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் மற்றும் அனைத்துவித பயிா்களும் தண்ணீரில் மூழ்கி முளைத்துவிட்டன. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, வேளாண் துறை, வருவாய் துறை அலுவலா்கள் மூலம் முழுமையாகக் கணக்கெடுப்பு செய்து விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும்.

இதில், ஏக்கருக்கு நெல்லுக்கு ரூ. 30,000, கடலை, மரவள்ளிக்கு தலா ரூ. 40,000, வாழைக்கு ரூ. 75,000, உளுந்து, சோளத்துக்கு தலா ரூ. 25,000, எள்ளுக்கு ரூ. 20,000, வெற்றிலை கொடிக்காலுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக் காப்பீட்டு நிறுவனம் மூலம் பயிா் காப்பீட்டுத் தொகை முழுமையாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →