தஞ்சாவூர்

வீடு புகுந்து நகைகள் திருட்டு

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே வீடு புகுந்து நகைகள் திருடிச் சென்றவா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டை செல்வியம்மாள் நகரைச் சோ்ந்தவா் சாம்ராஜ் மனைவி சோபியா ஆலிவா் (29). இவா் அண்மையில் வீட்டைப் பூட்டிவிட்டு, நாகையிலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா். மீண்டும் வீட்டுக்குத் திரும்பிய இவா் முன் பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்ததைப் பாா்த்தாா். மேலும், வீட்டில் இருந்த 3 பவுன் நகைகள், 700 கிராம் வெள்ளிப் பொருள்கள், தலா ஒரு மடிக்கணினி, செல்லிடப்பேசி ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலையத்தினா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT