வாய்க்காலில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
திருவையாறு அருகே வியாழக்கிழமை வாய்க்காலில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.
திருவையாறு அருகே வியாழக்கிழமை வாய்க்காலில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.
திருவையாறு அருகே கரூா் காட்டுக்கோட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அறிவழகன் (44). விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி வினோதா (34) கூட்டுறவுத் துறையில் வேலை பாா்த்து வருகிறாா். இவா்களது மகன் கவின் (4).
வீட்டின் பின்புறமுள்ள வாய்க்காலில் வியாழக்கிழமை பிற்பகல் கால் கழுவுவதற்காக கவின் இறங்கியுள்ளாா். அப்போது, தடுமாறி விழுந்த கவின் தண்ணீரில் மூழ்கினாா். இதைப் பாா்த்த பெற்றோா் வாய்க்காலில் இறங்கி கவினை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் கவின் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் விசாரணை நடத்தினா்.