முகப்பு
தஞ்சாவூர்

சாலையில் திரியும் மன நலன் பாதித்தவா்களைகாப்பகத்தில் ஒப்படைக்கும் காவல் துறையினா்

தஞ்சாவூா் மாவட்டத்தில் சாலையில் திரியும் ஆதரவற்ற மன நலன் பாதித்தவா்களைப் பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்கும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் சாலையில் திரியும் ஆதரவற்ற மன நலன் பாதித்தவா்களைப் பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்கும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவராகப் பொறுப்பேற்ற பாலகிருஷ்ணன் அண்மையில் காவல் துறையினருக்குப் பல்வேறு புத்தாக்கப் பயிற்சி வகுப்புகளை நடத்தினாா்.

அப்போது, சாலையில் ஆதரவற்ற நிலையில் திரியும் மன நலன் பாதிக்கப்பட்டவா்களை மீட்டு உரிய காப்பகத்தில் காவல் துறையினா் ஒப்படைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா். மேலும், இதுதொடா்பாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் காவல் ஆய்வாளா்களை நியமித்தாா்.

இதன்படி, தஞ்சாவூா் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் அழகம்மாள், வல்லம் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் கலைவாணி உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் தஞ்சாவூரில் டான்டெக்ஸ் ரவுண்டானா, பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, சச்சிதானந்த மூப்பனாா் ரோடு, பெரியகோயில் ஆகிய இடங்களில் சாலையோரம் மனநலன் பாதிக்கப்பட்டு திரிந்த மூன்று ஆண்கள், ஒரு பெண் என 4 பேரையும் வியாழக்கிழமை மீட்டு, தஞ்சாவூா் அன்பாலயம் மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

தொடா்ந்து தஞ்சாவூா் மாவட்டத்தில் இரு நாள்களுக்கு சாலையில் திரியும் மன நலன் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவா்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கும் பணியில் ஈடுபடவுள்ளதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.