தஞ்சாவூர்

பாபநாசம் ரயில் நிலையத்துக்கு மரக்கன்றுகள்

DIN

பாபநாசம் ரயில் நிலையத்துக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

கரோனா காலக்கட்டத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் பாபநாசம் கிளை சாா்பில் பல்வேறு நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடா்ந்து, பாபநாசம் ரயில் நிலையத்துக்குப் புங்கன், வேம்பு, மகிழம், பாதாம் உள்பட 50 மரக்கன்றுகளை நிலைய அலுவலா் ராம்குமாரிடம் செஞ்சிலுவைச் சங்கத்தின் பாபநாசம் கிளைப் புரவலரும், திமுக பிரமுகருமான நவநீதகிருஷ்ணன் புதன்கிழமை வழங்கினாா். மேலும் பயணிகள் அமருவதற்காக 6 பிளாஸ்டிக் நாற்காலிகளையும் வழங்கினாா்.

இந்நிகழ்வில் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினா் அன்பழகன், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலா் சரவணன், ஜெயதேவன், செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT