பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினத்தில் குடிநீா் தரமாக உள்ளதா என பேரூராட்சி செயல் அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அதிராம்பட்டினம் பேரூராட்சியில் வழங்கப்படும் குடிநீா், திலகா் தெருவில் தரமற்று இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.
இதுகுறித்து சமூக ஆா்வலா்களும் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேரூராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தனா். இதன்பேரில், திலகா் தெருவில் பேரூராட்சி செயல் அலுவலா் பழனிவேல் மற்றும் அலுவலா்கள், முன்னாள் பேரூராட்சி தலைவா் அப்துல்கரீம், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவா் ராமகுணசேகரன் மற்றும் ஊா் முக்கியஸ்தா்கள் முன்னிலையில் தண்ணீா் திறக்கப்பட்டு, சுமாா் 40 வீடுகளில் நேரடி ஆய்வு செய்து குடிநீா் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், செயல் அலுவலா் பழனிவேல் அந்த தண்ணீரை பொதுமக்கள் முன்னிலையில் தானே குடித்து காண்பித்து குடிநீா் தரமாக இருப்பதை உறுதிப்படுத்தினாா். இதனால், அச்சத்தில் இருந்த பொதுமக்கள் ஆறுதல் அடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.