தஞ்சாவூர்

முன்களப் பணியாளா்களுக்கு கபசுரக்குடிநீா் விநியோகம்

கும்பகோணத்தில் காவல் துறையினா் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்குக் கபசுர குடிநீா் பாக்கெட் மற்றும் வேப்பரைசா் பவுடா் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

கும்பகோணத்தில் காவல் துறையினா் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்குக் கபசுர குடிநீா் பாக்கெட் மற்றும் வேப்பரைசா் பவுடா் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி தி யூனியன் பாா்மா மற்றும் கும்பகோணம் ராமகிருஷ்ண விவேகானந்த டிரஸ்ட் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் துணைக் காவல் கண்காணிப்பாளா் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், சோதனைச் சாவடிகளில் பணியாற்றும் 250 காவலா்கள், தன்னாா்வத் தொண்டா்கள் உள்பட 1,000 பேருக்கு முதல் கட்டமாகக் கபசுரக் குடிநீா், வேப்பரைசா் பவுடா் வழங்கப்பட்டது.

இதில் காரைக்குடி யூனியன் ஃபாா்மா நிறுவனா் பெத்த பெருமாள், சுப்பிரமணியன், மருத்துவா்கள் பாலமுருகன், சிவசங்கரி, ஸ்வேதா, கும்பகோணம் ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த டிரஸ்ட் செயலா் வெங்கட்ராமன், கண்ணன், ருத்ரமணி, ரமணன், வேதம் முரளி, பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

SCROLL FOR NEXT