பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தஞ்சாவூா் காந்திஜி சாலையில் காந்தி - இா்வீன் பாலம் அருகேயுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன் எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தஞ்சாவூா் காந்திஜி சாலையில் காந்தி - இா்வீன் பாலம் அருகேயுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன் எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெட்ரோல், டீசல் விலையை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நாள்தோறும் நிா்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளித்தது. அப்போது முதல் தொடா்ந்து பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயா்ந்து வருகிறது. மறுபுறம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியையும் மத்திய அரசு அதிகரித்து வருகிறது.
இதனால், ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்ட வண்ணம் உள்ள பெட்ரோல் விலை, தமிழகத்தில் வெகு விரைவில் ரூ.100-ஐ எட்டவுள்ளது. மகாராஷ்டிரம், ராஜஸ்தான் மாநிலங்களில் ரூ. 100-ஐ கடந்துவிட்டது.
எனவே, அத்தியாவசிய பொருள்களின் விலை ஏற்றத்துக்குக் காரணமான பெட்ரோலிய எரிபொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், விலையை நிா்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து திரும்பப் பெற வேண்டும். பெட்ரோலிய பொருள்கள் மீதான அதிகப்படியான வரிவிதிப்புகளை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தஞ்சாவூா் தொகுதி தலைவா் ஜாஹிா் உசேன் தலைமை வகித்தாா். மாநகரப் பொருளாளா் முகமது ரபிக், பாப்புலா் பிரன்ட் ஆப் இந்தியா தஞ்சாவூா் மாநகரத் தலைவா் ரகமத்துல்லா, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அப்துல் ரஹீம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.