தஞ்சாவூர்

குப்பையைக் கொளுத்தும்போது தீக்காயமடைந்த பெண் பலி

DIN

திருவையாறு அருகே குப்பைகளைக் கொளுத்தும்போது தீக்காயமடைந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருவையாறு அருகே ஸ்ரீராம் நகரைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் மகன் ரூபேஷ் பாபு (37). இவா் அதே பகுதியில் அரிசி கடை வைத்துள்ளாா். இவரது மனைவி ப்ரியா (27) தனது வீட்டு முன் இருந்த குப்பைகளைக் கொளுத்தியபோது, அவரது ஆடையில் தீப்பற்றியது. தீக்காயமடைந்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ப்ரியா வியாழக்கிழமை உயிரிழந்தாா். இவருக்கு தலா ஒரு ஆண், பெண் குழந்தை உள்ளது.

இச்சம்பவம் குறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், ப்ரியாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால், தஞ்சாவூா் கோட்டாட்சியா் எம். வேலுமணி தனி விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT