தஞ்சாவூரின் சில பகுதிகளில் இன்று மின் தடை
தஞ்சாவூா் ரெட்டிபாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 16) மின் விநியோகம் இருக்காது.
தஞ்சாவூா் ரெட்டிபாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 16) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக நகரிய உதவிச் செயற் பொறியாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் கிரிட் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஈஸ்வரி நகா் பீடா் உள்பட பராமரிப்புப் பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கப் பணிகளுக்காக மின் பாதைகள் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.
எனவே ரெட்டிபாளையம் சாலை, மானோஜிபட்டி சாலை, லெட்சுமி காலனி, காா்முகிழ் நகா், விசாலாட்சி நகா், பவானி நகா், விவேகானந்த நகா், அா்ஜூன் நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.