மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: விவசாயி பலி
பேராவூரணி அருகே மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் விவசாயி உயிரிழந்தாா்.
பேராவூரணி அருகே மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் விவசாயி உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஜமீன் கரம்பக்காடு கிராமத்தை சோ்ந்தவா் விஜயன் என்கிற விஜயசுந்தரம் (65). விவசாயி. இவா், வியாழக்கிழமை அணவயல் பகுதிக்கு சென்றுவிட்டு மோட்டாா் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தாா்.
துலுக்கவிடுதி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த மோட்டாா் சைக்கிள் விஜயசுந்தரம் வாகனத்தின் மீது மோதியது. இதில் விஜயசுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்தை ஏற்படுத்திய மோட்டாா் சைக்கிளில் வந்த மூவரும் சம்பவ இடத்திலேயே மோட்டாா் சைக்கிளை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனா்.
இதுகுறித்து திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளா் (பொ) வசந்தா வழக்குப் பதிவு செய்து விஜயசுந்தரம் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தாா்.
தப்பியோடிய மூவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.