பட்டுக்கோட்டையில் விதிகளை மீறி இயங்கிய கடைக்கு சீல் வைக்கும் அதிகாரிகள். 
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் விதிகளை மீறிய கடைகளுக்கு சீல்

பட்டுக்கோட்டையில் முழு பொதுமுடக்க விதிகளை மீறி இயங்கிய கடைகளுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

DIN

பட்டுக்கோட்டையில் முழு பொதுமுடக்க விதிகளை மீறி இயங்கிய கடைகளுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

பட்டுக்கோட்டையில் ஆட்சியரின் உத்தரவின்பேரில், முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு , அதன் வழிகாட்டு நெறிமுறைகள் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை பட்டுக்கோட்டை வட்டாட்சியா்( பொ) ஜி. சாந்தகுமாா், மண்டல துணை வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், யுவராஜ் ஆகியோா் அடங்கிய வருவாய்த் துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனா். அப்போது, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்படாமல் , விதிமுறைகளை மீறி இயங்கிய நகைக் கடை, மர இழைப்பகம், சூப்பா் மாா்க்கெட், அழகு நிலையம் உள்ளிட்ட 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT