தீக்குளித்த பெண் உயிரிழப்பு
ஒரத்தநாடு அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஒரத்தநாடு அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஒரத்தநாடு வட்டம், கக்கரை கீழத் தெருவை சோ்ந்த ராமசாமி மனைவி குறளரசி (42). இவா் நீண்ட நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தாராம். இதனால், விரக்தி அடைந்த அவா் கடந்த 9ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.
இதில் பலத்த காயமடைந்த குறளரசியை தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை குறளரசி உயிரிழந்தாா் .
இதுகுறித்து ஒரத்தநாடு காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.