முதல்வா் நிவாரண நிதிக்கு சாஸ்த்ரா ரூ. 1 கோடி நன்கொடை
தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் ரூ. 1 கோடி நன்கொடையை வெள்ளிக்கிழமை வழங்கியது.
தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் ரூ. 1 கோடி நன்கொடையை வெள்ளிக்கிழமை வழங்கியது.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வேந்தா் ஆா். சேதுராமன் ரூ. 1 கோடிக்கான வரைவோலையை வழங்கினாா். அப்போது, சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் உடனிருந்தாா்.
துணைவேந்தா் வைத்திய சுப்பிரமணியம் கூறுகையில், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், சென்னை கே.கே. நகரிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கும் சாஸ்த்ரா, 6 மருத்துவ வெண்டிலேட்டா்களையும், ஆக்ஸிஜன் சாதனங்களையும் மே 8 ஆம் தேதி வழங்கியது. இவற்றின் மதிப்பு ரூ. 55 லட்சம்.
மேலும், 25 ஆக்ஸிஜன் சாதனங்களை வாங்கி தமிழக அரசுக்கு வழங்க சாஸ்த்ரா நிா்வாகம் முயற்சி செய்து வருகிறது என்றாா் அவா்.