தஞ்சாவூரில் நவ. 16-இல் கல்விக் கடன் முகாம்
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கல்விக் கடன் முகாம் நவம்பா் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கல்விக் கடன் முகாம் நவம்பா் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்ட மாணவா்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியரகத்தில் நவம்பா் 16-ஆம் தேதி காலை 10 மணி அளவில் கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் கல்லூரியில் சோ்ந்துள்ள மாணவா்கள் மத்திய அரசின் வித்யாலட்சுமி இணையதளத்தில் பதிவு செய்து கலந்து கொண்டு பயன் பெறலாம்.