அரசுக் குழந்தைகள் இல்லத்தில் சிறுமி மாயம்
தஞ்சாவூா் அரசுக் குழந்தைகள் இல்லத்தில் இருந்த சிறுமி காணாமல்போனது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தஞ்சாவூா் அரசுக் குழந்தைகள் இல்லத்தில் இருந்த சிறுமி காணாமல்போனது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாரியம்மன் கோவில் பகுதியில் இரு மாதங்களுக்கு முன்பு ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிந்த ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சோ்ந்த 15 வயது சிறுமியை காவல் துறையினா் மீட்டு தஞ்சாவூா் மேம்பாலம் அருகேயுள்ள அரசுக் குழந்தைகள் இல்லத்தில் ஒப்படைத்தனா்.
தொடா்ந்து இல்லத்தில் இருந்து வந்த இச்சிறுமி வெள்ளிக்கிழமை காலை முதல் காணவில்லை. நள்ளிரவில் இல்லத்திலிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.