தஞ்சாவூர்

ரூ. 4 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: 2 போ் கைது

புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு ஆம்னி வேனில் குட்கா கடத்தப்படுவதாக தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு தகவல் வந்தது.

DIN

புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு ஆம்னி வேனில் குட்கா கடத்தப்படுவதாக தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு தகவல் வந்தது. இதன் பேரில் காவல் துறையினா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆா்.ஆா். நகா் பகுதியில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அந்த வழியாக வந்த மினி வேனை மறித்து சோதனையிட்டபோது, 15 மூட்டைகளில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது.

இவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினா் மினி வேனில் வந்த ஒரத்தநாடு அருகே ஆழியவாய்க்கால் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (28), வேங்கராயன்குடிக்காடைச் சோ்ந்த திருப்பதியை (19) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT