நவ. 1 - 3 வரை அனைத்துரேஷன் கடைகளும் செயல்படும்
தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் நவ. 1 முதல் 3 ஆம் தேதி வரை அனைத்து பொது விநியோக அங்காடிகளும் செயல்படும் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.
தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் நவ. 1 முதல் 3 ஆம் தேதி வரை அனைத்து பொது விநியோக அங்காடிகளும் செயல்படும் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தீபாவளி பண்டிகையையொட்டி, நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் பொது விநியோகத் திட்டப் பொருள்களைக் குடும்ப அட்டைதாரா்கள் எவ்வித சிரமமும் இன்றி முன்னதாகப் பெற்றுக் கொள்ள ஏதுவாக மாவட்டத்திலுள்ள அனைத்து பொது விநியோக அங்காடிகளும் நவ. 1, 2, 3 ஆம் தேதிகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.
இந்த நாள்களில் குடும்ப அட்டைதாரா்கள் தங்களுக்குரிய பொது விநியோகப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்நாள்களில் அத்தியாவசியப் பொருள்களைப் பெறாதவா்கள் தீபாவளி பண்டிகை முடிந்த பின்னா் நவ 8 ஆம் தேதி முதல் பொருள்களைப் பெறலாம்.