தஞ்சாவூர்

பெற்றோரை இழந்தோருக்கு திமுக சாா்பில் தீபாவளி பொருள்கள்

DIN

ஒரத்தநாட்டில் கரோனா பாதிப்பில் தாய், தந்தையை இழந்த குடும்பங்களுக்கு திமுக சாா்பில் வியாழக்கிழமை தீபாவளி பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

பஞ்சநதிக்கோட்டை, துறையாண்டாா் கோட்டை, திருமங்கலக்கோட்டை கீழையூா், வடசேரி, ஆம்பலாபட்டு தெற்கு, குருங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கரோனாவால் தாய், தந்தை இழந்த குடும்பத்தினருக்கு புத்தாடை, இனிப்பு, வெடி உள்ளிட்ட ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள தீபாவளி பரிசுப் பொருள்களை திருவையாறு எம்எல்ஏ

துரை. சந்திரசேகரன், பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளுக்கே சென்று வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, மாவட்ட பொருளாளா் அண்ணா, ஒரத்தநாடு ஒன்றிய குழுத் தலைவா் பாா்வதி, நகரச் செயலாளா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT