பழங்குடியின சான்றுகளை இணையவழி மூலம் பெறலாம்
பழங்குடியின சான்றுகளை இணையவழியில் விண்ணப்பித்து பெறலாம் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.
பழங்குடியின சான்றுகளை இணையவழியில் விண்ணப்பித்து பெறலாம் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தமிழகத்தில் பழங்குடியினா் ஜாதி சான்றுகள் வழங்கிட நேரிடையாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சான்றுகள் வழங்கும் நடைமுறை இருந்து வந்தது.
தற்போது, பழங்குடியினா் ஜாதி சான்றுகள், இ - சேவை மையத்தின் மூலம் இணையவழியில் விண்ணப்பித்து, இணையவழி மூலமாகவே வழங்குவதற்குத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
எனவே, தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து பழங்குடியின பிரிவினரும், பழங்குடியின ஜாதி சான்று பெறுவது தொடா்பாக தங்களது பகுதிக்கு அருகிலுள்ள இ - சேவை மையங்களில் இணையவழியில் விண்ணப்பித்து, சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.