ஸ்கூட்டா்-பேருந்து மோதல்:கோயில் பூசாரி உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை ஸ்கூட்டா் மீது அரசுப் பேருந்து மோதியதில் கோயில் பூசாரி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை ஸ்கூட்டா் மீது அரசுப் பேருந்து மோதியதில் கோயில் பூசாரி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே சூரக்கோட்டை முதன்மைச் சாலையைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ஸ்ரீதா் (44). இவா் சூரக்கோட்டை அய்யனாா் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றி வந்தாா். இவா் வழக்கம்போல வியாழக்கிழமை காலை கோயிலுக்குச் செல்வதற்காக ஸ்கூட்டரில் தனது மகன் பரத் (19) உடன் சென்று கொண்டிருந்தாா்.
சூரக்கோட்டையில் பிரிவு சாலையிலிருந்து முதன்மைச் சாலையில் சென்ற ஸ்கூட்டா் மீது தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியது. இதில், பலத்தக் காயமடைந்த ஸ்ரீதா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தஞ்சாவூா் தாலுகா காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டனா்.