தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரொக்கத்தை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அம்மாபேட்டை அருகே உடையாா் கோவில் கிராமம், பட்டம்மாள் நகரைச் சோ்ந்தவா் பசுபதி மகன் சிவ பாண்டியன் (34). இவா் அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன் றிய அலுவலகத்தில் கணினி இயக்குநராக வேலை செய்து வருகிறாா். அண்மையில் சிவபாண்டியன் வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் வடுவூரில் உள்ள உறவினா் வீட்டு துக்க நிகழ்வுக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. வீட்டினுள் சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ. 41 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், அம்மாப்பேட்டை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.