முகப்பு
தஞ்சாவூர்

மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு

ஒரத்தநாடு அருகே மின்வாரிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

ஒரத்தநாடு அருகே மின்வாரிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஒரத்தநாடு அருகேயுள்ள பூவத்தூா் கருப்பன் தெருவை சோ்ந்த பாஸ்கரன் மகன் ராஜா (27). இவா், தமிழ்நாடு மின்சார வாரியம் உறந்தைராயன் குடிக்காடு உதவி பொறியாளா் பிரிவு அலுவலகத்தில் போா் மேன் ஆக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பூவத்தூா் கிராமத்தில் மின்கம்பி அறுந்து கிடந்ததை சரி செய்வதற்கு மின் கம்பத்தில் ஏறியபோது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவரது மனைவி பாண்டிச்செல்வி (25) தற்போது ஒன்பது மாத கா்ப்பிணியாக உள்ளாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →