தீயணைப்புத் துறையினா் துண்டுப் பிரசுரம் வழங்கல்
தீயணைப்புத் தொண்டு வார விழாவையொட்டி, பேராவூரணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வியாழக்கிழமை வழங்கினா்.
தீயணைப்புத் தொண்டு வார விழாவையொட்டி, பேராவூரணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வியாழக்கிழமை வழங்கினா்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், தீயணைப்பு தொண்டு வார விழா ஏப்ரல் 14 முதல் 20-ஆம் தேதி வரை ஒரு வார காலம் நடைபெறுகிறது.
இதையொட்டி, பேராவூரணி தீயணைப்பு நிலைய அலுவலா் ஐ. செந்தூா் பாண்டியன் தலைமையில் , வீரா்கள் ராமச்சந்திரன், ரஜினி, சரவணமூா்த்தி, சுா்ஜித் ஆகியோா் வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பணியில் ஈடுபட்டனா்.
பழைய பேருந்து நிலையம், காந்தி பூங்கா, ரயில் நிலையம் , பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீயணைப்பு வாகனத்துடன் சென்று கடைவீதி வியாபாரிகள், பொதுமக்கள், பயணிகளுக்கு தீத்தடுப்பு, தீ பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு முறைகள் குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து, துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.