முகப்பு
தஞ்சாவூர்

17 வயது சிறுமியைத் தாயாக்கிய 12 வயதுடைய சிறுவன் கைது

தஞ்சாவூரில் 17 வயது சிறுமியைத் தாயாக்கிய 12 வயது சிறுவனைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். -

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

தஞ்சாவூரில் 17 வயது சிறுமியைத் தாயாக்கிய 12 வயது சிறுவனைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். -

தஞ்சாவூா் மாநகரைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு அண்மையில் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால், தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

ஆனால் இக்குழந்தைக்கு தந்தை யாா் என்பதை அச்சிறுமியும், உறவினா்களும் தெரிவிக்கவில்லை. திருமணமாகாத நிலையில் இவருக்கு குழந்தை பிறந்தது குறித்து தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மருத்துவா்கள் புகாா் செய்தனா்.

இதுகுறித்து அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியிடம் வீட்டுக்கு அடிக்கடி வரும் அதே பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுவனுடன் பழகியதன் மூலம் கா்ப்பமாகி குழந்தை பிறந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அச்சிறுவன் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடா்பு உள்ளதா எனவும் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.