முகப்பு
தஞ்சாவூர்

மே 1-இல் கிராம சபைக் கூட்டம்

 தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் மே 1-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

 தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் மே 1-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:

மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளா் தினமான மே 1- ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஊராட்சி அலுவலகத் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன.

இக்கூட்டத்தில் வரவு - செலவு கணக்குகள், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தோ்வு, அரசுத் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.