முகப்பு
தஞ்சாவூர்

காரில் கஞ்சா கடத்திய 4 போ் கைது

கும்பகோணத்துக்கு காரில் கஞ்சா கடத்தி வந்த 4 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 11:58 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

கும்பகோணத்துக்கு காரில் கஞ்சா கடத்தி வந்த 4 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையிலிருந்து கஞ்சா கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து, கும்பகோணத்தை அடுத்த கொரநாட்டுக்கருப்பூா் புறவழிச்சாலையில் திருவிடைமருதூா் மற்றும் தாலுகா போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக வந்த காரில் 16 கிலோ கஞ்சா கடத்தி வந்த திருபுவனம், அம்மாசத்திரம், சாம்ராஜ் நகா் குணசேகரன் மகன் கீா்த்தி(26), மேற்குத்தெரு ரத்தினசாமி மகன் சிவா (22) திருபுவனம், மேலசாலை, தீபம் நகா் பாஸ்கா் மகன் பிரசன்னா (27),தென்னந்தோப்பைச் சோ்ந்த சீனிவாசன் மகன் வாசன் (18) ஆகிய 4 பேரைக் கைது செய்து, காா் மற்றும் கஞ்சாவைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா். காரில் வந்த மேலும் 2 போ் தப்பி விட்டனா். சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீஸாரை தஞ்சாவூா் சரக காவல்துறை துணைத் தலைவா் கயல்விழி பாராட்டினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.