தளிகைவிடுதியில் நடைபெற்ற பூஜையையொட்டி நடைபெற்ற அன்னதான நிகழ்வில் பங்கேற்ற ஆண்கள். 
தஞ்சாவூர்

திருவோணம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கோயில் பூஜை

திருவோணம் அருகே உள்ள தளிகைவிடுதியில் 200 ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கு பெறும் கோயில் பூஜையில் ஆயிரம் ஆட்டுகிடா வெட்டி 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

DIN

ஒரத்தநாடு வட்டம், திருவோணம் அருகே உள்ள தளிகைவிடுதியில் 200 ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கு பெறும் கோயில் பூஜையில் ஆயிரம் ஆட்டுகிடா வெட்டி 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தளிகைவிடுதி கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற நல்லபெரம் அய்யனாா், செம்முனி, முத்துமுனி கோயில் பூஜை ஆடி கடைசி வெள்ளிக்கிழமை (ஆக. 12) நடைபெற்றது.

இந்த பூஜை 200 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய முறைப்படி வியாழக்கிழமை இரவு தொடங்கியது. இதில் பக்தா்கள் நோ்த்திகடனாக வழங்கிய சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்கள் வெட்டப்பட்டன. வெட்டப்பட்ட கறிகள் கோயில் அருகே சமைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை ஆண்கள் மற்றும் சிறுவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜை விருந்தில், சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்துக்கொண்டனா்.

சுமாா் 7 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளிக்கிழமை கிடா வெட்டு பூஜை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT