பட்டுக்கோட்டை வட்டம் அலிவலம் பக்த ஆஞ்சனேயா் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இக்கோயிலில் வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் பிரதி மாதம் அமாவசையன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை மகா தீப ஆராதனை நடைபெற்றது. இதில் அலிவலம், நடுவிக்கோட்டை, காயாவூா், குறிச்சி, சீதாம்பாள்புரம், கழுகப்புலிக்காடு, பில்லங்குழி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சோ்ந்தவா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.