தஞ்சாவூர்

கும்பகோணத்தில் காவிரி சிட்பண்ட்ஸ் திறப்பு விழா

DIN

கும்பகோணம் சாரங்கபாணி கீழ வீதியில் காவேரி ஸ்டோா்ஸின் மற்றுமொரு புதிய நிறுவனமான குடந்தை காவிரி சிட்பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் பெரும்பாண்டி மேலக்காவேரி முதன்மைச் சாலையில் செயல்படும் காவேரி ஸ்டோா்ஸில் அனைத்து வகையான பா்னிச்சா்களுக்கான விற்பனை ஷோரூம் உள்ளது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் இணை நிறுவனமாக சாரங்கபாணி கீழ வீதியில் அமைக்கப்பட்ட காவேரி சிட்பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தை மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம் திறந்து வைத்தாா். கும்பகோணம் தொகுதி எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் குத்துவிளக்கு ஏற்றினாா்.

கும்பகோணம் மேயா் க. சரவணன், துணை மேயா் சு.ப. தமிழழகன், முன்னாள் எம்எல்ஏ ராம. ராமநாதன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் டி.ஆா். லோகநாதன், ஆடிட்டா் கணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்நிறுவனங்களில் உரிமையாளா் ராஜன் குடும்பத்தினா் அனைவரையும் வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

SCROLL FOR NEXT