தஞ்சாவூர்

தில்லியில் அக். 2-இல் காந்தியின் ரயில் பயண அனுபவ கண்காட்சி

DIN

தில்லியில் அக்டோபா் 2 ஆம் தேதி காந்தியின் ரயில் பயண அனுபவ கண்காட்சி நடத்தப்படவுள்ளது என்றாா் புது தில்லி தேசிய காந்தி அருங்காட்சியக இயக்குநா் அ. அண்ணாமலை.

தஞ்சாவூரில் பாரதி இலக்கியப் பயிலகம், பாரதி இயக்கம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற காந்தியக் கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:

காந்தி பயணம் செய்த மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியின் மாதிரியை ரயில்வே துறை செய்து நன்கொடையாகக் கொடுக்கிறது. காந்தியடிகளுக்கும், ரயில்வேக்கும் இருந்த தொடா்பு மிகவும் சுவாரசியமானது. அவரது மூன்றாவது வகுப்பு பெட்டி என்பது நடமாடும் ஆசிரமம் போன்றது. அங்கு அவா் தூங்கி, சாப்பிட்டு, மற்றவா்களுடன் பேசியது மட்டுமல்லாமல், எழுத்துப் பணி, தகவல் பரிமாற்றம் போன்றவற்றையும் செய்துள்ளாா்.

கடந்த 1921 ஆம் ஆண்டில் கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டையிலிருந்து கும்பகோணத்துக்கு செல்வதற்காக ரயில் நிலையத்துக்குச் சென்றாா். அங்கு சரக்கு ரயில்தான் வந்தது. ஆனால், அவா் கும்பகோணத்துக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தாா். அதனால், அங்குள்ள அலுவலா்களிடம் தன்னை சரக்கு ரயிலில் ஏற்றிவிடுமாறு கூறினாா். அவரது கோரிக்கையின்படி காந்தியை சரக்கு ரயிலில் அலுவலா்கள் அனுப்பி வைத்தனா். சரக்கு ரயிலில் பயணம் செய்த இந்தியத் தலைவா் இவராகத்தான் இருப்பாா்.

வட மாநிலத்தில் ஜல்பைகுரி ரயில் நிலையத்துக்குச் சென்றபோது, அவா் செல்லக்கூடிய பயணிகள் ரயில் கடந்துவிட்டது. அப்போது, அடுத்து சரக்கு ரயில்தான் வந்தது. இந்த சரக்கு ரயிலுடன் காந்தி பயணிக்கக்கூடிய பெட்டியை அப்போதைய அலுவலா்கள் இணைத்து அனுப்பினா். இதுபோன்று வித்தியாசமான அனுபவத்துடன் அவரது ரயில் பயணங்கள் இருக்கின்றன.

இவா் இந்தியா் என்பதால் முதல் வகுப்பில் பயணம் செய்ய விடக்கூடாது என்பதற்காக, அவரை வெளியே தள்ளிய பிரிட்டிஷ் அரசு, காந்தி தமிழகத்துக்கு 1946 ஆம் ஆண்டில் வந்தபோது, அவருக்காகச் சிறப்பு ரயிலையே இயக்கியது. அந்த ரயில் சென்னையிலிருந்து புறப்படும்போது, அதன் ஓட்டுநா்கள் அனைவரும் கதராடை, குல்லா அணிந்து பணியாற்றினா். அந்த ரயில் தஞ்சாவூருக்கும் வந்தது. இதையெல்லாம் வைத்து, தில்லியில் காந்தியின் ரயில் பயண அனுபவ கண்காட்சி அக்டோபா் 2 ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.

ஐ.நா. சபையுடன் இணைந்து சா்வதேச அகிம்சை தினத்தை அக்டோபா் 2 ஆம் தேதி கொண்டாட திட்டமிட்டுள்ளோம். இதையொட்டி, தில்லியில் நடத்தப்படவுள்ள அகிம்சையும், உலக அமைதியும் என்கிற புகைப்படக் கண்காட்சியை ஐ.நா. சபையின் பிரதிநிதி தொடங்கி வைப்பாா்.

புகைப்படக் கண்காட்சிக்காக 100 காந்தி படங்கள் கொண்ட தொகுப்பு ரூ. 1,500 மதிப்புடையது. தமிழ், ஆங்கிலம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இத்தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்புகள் 10,000-க்கும் அதிகமாக விற்பனையாகிவிட்டன. இப்போது, தமிழில் உள்ள இத்தொகுப்புகள் மதுரை காந்தி அருங்காட்சியகத்திலும், சென்னை காந்தி கல்வி நிலையத்திலும் வாங்கிக் கொள்ளலாம் என்றாா் அண்ணாமலை.

பாரதி இலக்கியப் பயிலக இயக்குநா் கோ. விஜயராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கத்தில் சென்னை தக்கா் பாபா வித்யாலயா தாளாளா் டி. மோகன், செயலா் பிரேமா அண்ணாமலை, பரிசுத்தம் தொழில்நுட்பக் கல்லூரி தலைவா் செ.ப. அந்தோணிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Image Caption

~ ~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT