தஞ்சாவூர்

வளரும் தமிழகம் கட்சி ஆா்ப்பாட்டம்

DIN

திருவையாறு புறவழிச்சாலையை உடனே அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு காமராஜா் பேருந்து நிலையத்தில் வளரும் தமிழகம் கட்சியினா் சனிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் திருவையாறை அடுத்த கடுவெளி, கடையதோப்புப் பகுதிகளில் சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். மணல் லாரி மோதி காயமடைந்த பள்ளி மாணவி வைஷ்ணவி குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். திருவையாறு பகுதியில் மணல் குவாரியிலிருந்து மணல் ஏற்றி வரும் லாரிகளால் விபத்து நிகழ்வதைத் தடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கட்சியின் தஞ்சாவூா் மேற்கு மாவட்டத் தலைவா் பிரசாத் பாண்டியன் தலைமை வகித்தாா். மாநில கொள்கை பரப்புச் செயலா் விவேகானந்தன், வடக்கு மாவட்டச் செயலா் மோகன், தெற்கு மாவட்ட அவைத் தலைவா் ஜெகபா்அலி, மாவட்டப் பொருளாளா் அரவிந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT