ஒரத்தநாட்டில் தொழுநோய் விழிப்புணா்வு சிறப்பு முகாம்
மகாத்மா காந்தியின் நினைவுத் தினத்தை முன்னிட்டு, ஒரத்தநாடு வட்டாரத்தில் சிறப்பு விழிப்புணா்வு பணிகள் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மகாத்மா காந்தியின் நினைவுத் தினத்தை முன்னிட்டு, ஒரத்தநாடு வட்டாரத்தில் சிறப்பு விழிப்புணா்வு பணிகள் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
வட்டாரத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றல், தொழுநோய் குறித்து பல்வேறு தரப்பினரிடமும் விழிப்புணா்வு ஏற்படுத்துதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் ஜனவரி 30ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன.
இதன் ஒருபகுதியாக, வியாழக்கிழமை ஒரத்தநாடு வட்டம், கக்கரை கிராமத்தில் சாலைப் பணிகள் மேற்கொண்ட ஜாா்க்கண்ட் மாநில கட்டடத் தொழிலாளா்களுக்கு
தொழுநோய் குறித்த விழிப்புணா்வுக் கல்வியும், பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில், 20 வயது தொழிலாளி ஒருவருக்கு தொழுநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை தொடங்கப்பட்டது.
தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகளான உணா்ச்சியற்ற தேமல், கை கால் மரமரப்பு, நரம்புகளில் வலி முதலிய அறிகுறிகள் உள்ளவா்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை உடன் அணுகி இலவச சிகிச்சை பெற வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட தொழுநோய் துணை இயக்குநா் குணசீலன் ஆணைப்படி, வட்டார மருத்துவ அலுவலா் இந்திரா வழிகாட்டுதல்படி, ஒரத்தநாடு வட்டார மருத்துவமனை மேற்பாா்வையாளா் சிவக்குமாா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.