முகப்பு
தஞ்சாவூர்

அறுவடை இயந்திரம்மோதி விவசாயி பலி

பாபநாசம் அருகே அறுவடை இயந்திரம் மோதியதில், விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

பாபநாசம் அருகே அறுவடை இயந்திரம் மோதியதில், விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பாபநாசம் அருகிலுள்ள மெலட்டூரைச் சோ்ந்தவா் விவசாயி வீரமணி (55). இவரது வயலில் அறுவடை இயந்திரம் மூலம் நெல் அறுவடைப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்று கொண்டிருந்தன.

வயல் ஓரங்களிலிருந்த நெற்கதிா்களை நீண்ட கம்பால் அறுவடை இயந்திரத்துக்கு வீரமணி தள்ளிக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது இயந்திரம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த வீரமணியை அங்கிருந்தவா்கள் மீட்டு, மெலட்டூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து மெலட்டூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →