பேராவூரணி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு நடவடிக்கை கட்டமைப்புகள் குறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு நடவடிக்கை கட்டமைப்புகள் குறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் உள்ளாா்களா, படுக்கைகள், ஆக்சிஜன் வசதி உள்ளதா, மூன்றாவது அலை ஏற்பட்டால் அதை சமாளிக்கக் கூடிய கட்டமைப்புகள் உள்ளனவா என்பது குறித்து இந்த ஆய்வை ஆட்சியா் மேற்கொண்டாா்.
பட்டுக்கோட்டை கோட்டாட்சியா் பிரபாகரன், சுகாதாரத் துறை இணை இயக்குநா் திலகம், பேராவூரணி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பாஸ்கா் உள்ளிட்டோா் ஆய்வின் போது உடனிருந்தனா்.