தஞ்சாவூா் பெரியகோயிலில் உள்ள உண்டியல்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் ரூ. 11 லட்சம் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது.
இக்கோயிலில் மொத்தம் 11 உண்டியல்கள் உள்ளன. இவை அறநிலையத் துறை உதவி ஆணையா்கள் ச. கிருஷ்ணன், சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் முன்னிலையில் வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டது. இவற்றை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள், பக்தா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா். காலையில் தொடங்கிய இப்பணி மாலை வரை நடைபெற்றது.
இதில், பக்தா்கள் 11 லட்சத்து 7 ஆயிரத்து 227 ரூபாய் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது.