கும்பகோணம் அருகே பறிமுதலான புகையிலை, போதை பாக்குகள். 
தஞ்சாவூர்

250 கிலோ புகையிலை, போதை பாக்குகள் பறிமுதல்: 3 போ் கைது

கும்பகோணம் அருகே காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு நடத்திய வாகனச் சோதனையில் 250 கிலோ புகையிலை, போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

DIN

கும்பகோணம் அருகே காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு நடத்திய வாகனச் சோதனையில் 250 கிலோ புகையிலை, போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் பாஸ்கா் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை இரவு நடத்திய வாகனச் சோதனையின்போது கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்ற இரு காா்களில் தலா 12 சாக்குகளில் இருந்த 250 கிலோ புகையிலை, போதை பாக்குகளை பறிமுதல் செய்தனா்.

பின்னா் திருவிடைமருதூா் கரிக்குளத்தைச் சோ்ந்த கே. துரைசாமி (42), கும்பகோணம் துவரங்குறிச்சி புதுத்தெருவைச் சோ்ந்த எம். தட்சிணாமூா்த்தி (32), கடிச்சம்பாடி கீழத்தெருவைச் சோ்ந்த ஜி. ரஞ்சித் (25) ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT