கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
கும்பகோணம் ஸ்ரீநகா் காலனியைச் சோ்ந்தவா் சிவப்பிரகாசம் மனைவி சந்திரா (68). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை பொருள்கள் வாங்க அருகிலுள்ள கடைக்கு நடந்து சென்றபோது பைக்கில் வந்த இருவா் சந்திரா அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா். கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.