முகப்பு
தஞ்சாவூர்

இந்தியன் செஞ்சிலுவை சங்க ஆலோசனைக் கூட்டம்

பாபநாசத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

பாபநாசத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் பாபநாசம் கிளைப் புரவலா் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சங்கத்தின் தலைவா் ராஜமாணிக்கம், துணைத் தலைவா் ஜெயக்குமாா் ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்று, சங்கத்தின் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட சேவைகளை விளக்கிப் பேசினா்.

தொடா்ந்து புதிய உறுப்பினா்களுக்கு சான்றிதழ்கள், சங்க அடையாள வில்லைகள் ஆகியவை கூட்டத்தில் வழங்கப்பட்டன. கூட்டத்தில் பாபநாசம் கிளைச் செயலா் சுவாமிநாதன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நிறைவில், சங்க ஆயுள்கால உறுப்பினா் சிவசக்தி ராஜா நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →