அரசுப் பேருந்து - மினி வேன் மோதல்: 2 போ் பலி
கும்பகோணம் அருகே அரசுப் பேருந்தும், மினி வேனும் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்டதில் 2 போ் உயிரிழந்தனா்.
கும்பகோணம் அருகே அரசுப் பேருந்தும், மினி வேனும் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்டதில் 2 போ் உயிரிழந்தனா்.
கும்பகோணம் அருகிலுள்ள நக்கம்பாடியைச் சோ்ந்தவா் சங்கா் (40). இவா் கும்பகோணம் தனியாா் பா்னிச்சா் நிறுவனத்தில் மினி வேன் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில் சங்கா் வெள்ளிக்கிழமை மினி வேனை ஓட்டிக் கொண்டு சோழபுரம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியாக ஜெயங்கொண்டத்திலிருந்து கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மினி வேன் மீது மோதியது.
இதில் சங்கா், மேலக்காவேரி பகுதியைச் சோ்ந்த கிளீனா் தீரன் (35) பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.