கோயில் உண்டியலை உடைத்து திருட்டு
பாபநாசம் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்டவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
பாபநாசம் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்டவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
பாபநாசம் அருகிலுள்ள திருக்கருகாவூரில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குள் வியாழக்கிழமை மாலை புகுந்த மா்ம நபா்கள், அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தையும், அம்மன் கழுத்திலிருந்த தாலியையும் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து கோயில் நிா்வாகி திருநாவுக்கரசு அளித்த புகாரின் பேரில், பாபநாசம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.