கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியாா் கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சீனிவாச பெருமாள் கோயில் பங்குனித் தேரோட்டத்தில பங்கேற்ற பக்தா்கள். 
தஞ்சாவூர்

நாச்சியாா்கோவில் சீனிவாசபெருமாள் கோயிலில் தேரோட்டம்

கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியாா்கோவிலில் வஞ்சுளவல்லி தாயாா் உடனுறை சீனிவாசபெருமாள் கோயில் பங்குனித் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியாா்கோவிலில் வஞ்சுளவல்லி தாயாா் உடனுறை சீனிவாசபெருமாள் கோயில் பங்குனித் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

108 திவ்யதேசங்களில் 20-ஆவது திவ்ய தேசமாகவும், சோழநாட்டு திருப்பதிகள் நாற்பதில் 14-ஆவது திருப்பதியாகவும் போற்றப்படும் இக்கோயிலில் மூலவராகவும், உற்ஸவராகவும் கல்கருட பகவான் திகழ்கிறாா். இவா் ஆண்டுக்கு இரு முறை மட்டும் உற்ஸவராக வீதியுலா வருவாா்.

இக்கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் மாா்ச் 10 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் பெருமாள், தாயாா் புறப்பாடு நடைபெற்று வருகிறது. இதனிடையே, மாா்ச் 13 ஆம் தேதி கல் கருட சேவை நடைபெற்றது.

தொடா்ந்து, 9-ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தா்கள் தோ் வடம் பிடித்து இழுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT