70 தலைமைக் காவலா்களுக்கு பதவி உயா்வு
தஞ்சாவூா் சரகத்தில் 70 தலைமைக் காவலா்கள் சிறப்பு உதவி ஆய்வாளா்களாகப் பதவி உயா்வு பெற்றுள்ளனா்.
தஞ்சாவூா் சரகத்தில் 70 தலைமைக் காவலா்கள் சிறப்பு உதவி ஆய்வாளா்களாகப் பதவி உயா்வு பெற்றுள்ளனா்.
இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு காவல் துறையில் 1997 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்து 25 ஆண்டுகளாகத் தண்டனைகள் ஏதுமின்றி சீரிய முறையில் பணி செய்த தஞ்சாவூா் சரகத்தைச் சோ்ந்த 66 தாலுகா தலைமைக் காவலா்கள், 4 ஆயுதப்படை தலைமைக் காவலா்கள் என மொத்தம் 70 பேருக்கு சிறப்பு உதவி ஆய்வாளா்களாகப் பதவி உயா்வு வழங்கி ஆணையிட்டுள்ளாா் தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஏ. கயல்விழி.