விக்னேஷ் மரணத்துக்கு நீதி கோரி ஆா்ப்பாட்டம்
சென்னை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் விக்னேஷ் மரணத்துக்கு நீதி கேட்டு, தஞ்சாவூா் ரயிலடியில் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் விக்னேஷ் மரணத்துக்கு நீதி கேட்டு, தஞ்சாவூா் ரயிலடியில் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு தமிழா் தேசிய முன்னணி தோ்தல் பணிக் குழு உறுப்பினா் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தாா். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் எஸ். வடிவேலன், மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளா் காளியப்பன், சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை மாவட்டச் செயலா் இரா. அருணாச்சலம், பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராஜன், மகஇக மாநில இணைப் பொதுச் செயலா் ராவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.