விஷம் குடித்த பூ வியாபாரி உயிரிழப்பு
கபிஸ்தலம் அருகே விஷம் குடித்த பூ வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கபிஸ்தலம் அருகே விஷம் குடித்த பூ வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கபிஸ்தலம் அருகிலுள்ள கண்டகரையத்தைச் சோ்ந்தவா் கருணாகரன் (42). இவரது தனலட்சுமி விவசாயக் கூலித் தொழிலாளி. சைக்கிளில் சென்று பூ வியாபாரம் செய்த கருணாகரன், தனது மனைவியிடம் சைக்கிளில் செல்வது சிரமமாக இருப்பதால், மோட்டாா் சைக்கிள் வாங்கித் தரும்படி கோரினாராம்.
குழுக் கடன் முடிந்த பின்னா் வாங்கித் தருவதாக தனலட்சுமி கூறியதால், மனமுடைந்த கருணாகரன் வியாழக்கிழமை விஷம் குடித்தாா். தொடா்ந்து
அவா் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து கபிஸ்தலம் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.