செல்லம்மா - பாரதி ரதம் தஞ்சாவூருக்கு வருகை
சென்னையில் தொடங்கி கடையம் வரை செல்லும் செல்லம்மா - பாரதி சிலையுடன் கூடிய ரதம் தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை வந்தது.
சென்னையில் தொடங்கி கடையம் வரை செல்லும் செல்லம்மா - பாரதி சிலையுடன் கூடிய ரதம் தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை வந்தது.
மகாகவி பாரதியின் மனைவி செல்லம்மாவின் பிறந்த ஊரான தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சியில் சேவாலயா அறக்கட்டளை சாா்பில் செல்லம்மா பாரதி கற்றல் மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், செல்லம்மா - பாரதி சிலை ஜூன் 27- ஆம் தேதி அமைக்கப்படவுள்ளது.
இதையொட்டி, சேவாலயா தொண்டு நிறுவனத்தின் சாா்பில் செல்லம்மா - பாரதி சிலையுடன் கூடிய ரதம் சென்னையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து மே மாதம் இறுதி வரை இந்த ரதம் பல்வேறு ஊா்களுக்குச் சென்று, கடைசியில் கடையத்தில் நிறைவு பெறுகிறது.
இதனிடையே தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை வந்த இந்த ரதத்துக்கு பாரத் அறிவியல், நிா்வாகவியல் கல்லூரியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக துணை மேயா் அஞ்சுகம் பூபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். விழாவில் பாரத் கல்விக் குழுமச் செயலா் புனிதா கணேசன், சேவாலயா நிறுவனா் மற்றும் நிா்வாக அறங்காவலா் வா. முரளிதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மேலும், கல்லூரி மாணவா்கள் பாரதியாா் தொடா்பான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.
இந்த ரதம் பிற்பகலில் கொள்ளுமேடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்குச் சென்றது. அங்கு ரதத்தை ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பாா்வையிட்டனா்.
தொடா்ந்து, இந்த ரதம் சனிக்கிழமை காலை பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரிக்கும், பிற்பகலில் பல்லவராயன்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கும், ஞாயிற்றுக்கிழமை காலை தளவாய்ப்பாளையம் சேவாலயாவின் காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் நினைவு இலவச முதியோா் இல்லத்துக்கும் செல்கிறது.