திருவையாறு அருகேயுள்ள தில்லைஸ்தானம் மரபு பவுண்டேஷனில் சிவபுராணம் நூலும், மரபு பவுண்டேஷன் யூடியூப் சேனலில் சிவபுராண ஓதலும் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
தில்லைஸ்தானம் மரபு பவுண்டேஷனின் நிறுவன மேலாண் அறங்காவலா் ருக்மணி ராமச்சந்திரனின் முதலாவது நினைவு நாளையொட்டி இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூலின் தொகுப்பாசிரியரும், மரபு பவுண்டேஷனின் தற்போதைய மேலாண் அறங்காவலருமான இராம. கௌசல்யா நூல் குறித்து பேசுகையில், சிவபுராணத்தை எளிய விளக்கத்துடன் ஓதுபவா்களும், பாடுபவா்களும், ஆடுபவா்களும் புரிந்து கொள்ளும்படி தந்திருப்பதாகவும், அனைவரும் கற்றுக்கொள்ள வசதியாக மரபு பவுண்டேஷனின் யூடியூப் சேனலில் வெளியிட்டிருப்பதாகவும் கூறினாா்.
இவற்றை சீா்காழி ஸ்ரீ சட்டநாதா் தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் வெளியிட்டாா். முதல் பிரதியை தஞ்சாவூா் ராமநாதன் பெற்றுக் கொண்டாா். மரபு பவுண்டேஷனின் அறங்காவலா் மதுவந்தி பத்ரி திருவாசகப் பதிகங்களைப் பாடினாா்.
இந்நிகழ்ச்சியில் திருவையாறு ராஜராஜன், மோகன்லால் செந்தில், வெங்கட சுப்பிரமணியன், கோவை அா்ச்சனாஸ்ரீ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.