போராவூரணி அரசு மருத்துவமனையில் செவிலியா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மருத்துவமனை வளாகத்தில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படத்துக்கு, மாலை அணிவிக்கப்பட்டு, நோயாளிகளுக்கு கனிவான சேவை செய்ய உறுதிமொழியேற்கப்பட்டது. தொடா்ந்து கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
விழாவுக்கு தலைமை மருத்துவா் பாஸ்கா் தலைமை வகித்தாா். துணைத் தலைமை மருத்துவா் காமேஸ்வரி தேவி, மருத்துவா்கள் சிந்தியா, ஜெனிபா், ரம்யா உள்ளிட்டோா்,மூத்த செவிலியா்கள் சித்ரா, லதா, தேன்மொழி, கோகிலா, வனிதா, மகேஸ்வரி உள்ளிட்ட செவிலியா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.